ஆப்நகரம்

கொரோனா இல்லாத தமிழ்நாடு; வெளியான ஹேப்பி நியூஸ்!

நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலில் தமிழகத்திற்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2021, 11:03 am
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. நேற்று புதிதாக 610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,30,183ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,272ல் இருந்து 6,128ஆக குறைந்துள்ளது. 775 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் 6 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 12,257ஆக உயர்ந்துள்ளன. அதாவது சென்னையில் 4, செங்கல்பட்டில் 2 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Coronavirus in Tamil Nadu


மற்ற மாவட்டங்கள் கோவிட்-19 உயிரிழப்புகள் இல்லாத மாவட்டங்களாக மாறியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கொரோனா மரணங்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்பிற்கு ஆளானவர்கள் தான் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: கொங்கு மண்டலத்தில் விசிட்!
புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்களை விட குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் இரண்டே மாதங்களில் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிடக் கூடும். அப்போது கொரோனா இல்லாத தமிழகமாக மாறும். அதேசமயம் புதிய பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் தமிழக மக்கள் முன்பிருக்கும் மிகப்பெரிய சவால். இந்த விஷயத்தில் தமிழக மக்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தால் வைரஸ் தொற்று இல்லாத தமிழகம் வெகு தூரத்தில் இல்லை என்று கூறுகின்றனர். மறுபுறம் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஜாலியா வாரணாசியை சுற்றிப் பார்த்து, சாட் சாப்பிட்ட அஜித்
இதையடுத்து வயதானவர்கள், ஏற்கனவே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் என இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடப்படவுள்ளது. இந்த செயல்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் நமது இயல்பு வாழ்க்கையை தொடரலாம்.

அடுத்த செய்தி