ஆப்நகரம்

டாக்டர்கள், கொரோனா நோயாளிகளுக்கு போலீஸ் பந்தபோஸ்த்...

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வழங்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவு பிறபித்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2020, 1:00 am
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு வைத்தியம் அளிக்கும் மருத்துவர்களுக்கு மாநில அரசுகள் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு போட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புபடம்


கொரோனா தொற்று காரணமாக நாட்டில் 7 ஆயிரத்து 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பரிசோதனைகள் தீவிரப்படுத்தினால் கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்படுபவர்கள் வெளியே செல்வதும், பிறருடன் தொடர்பு வைத்துக் கொள்வதுமான செயல்கள் சாதாரணமாக நடந்து வருகிறது.

இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர்..! எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்

சில இடங்களில் மருத்துவர்களைத் தாக்கும் சம்பவங்களும், கொரோனா நோயாளிகளை உளவியல் ரீதியாகத் தாக்கும் சம்பவங்களும் நடந்து வருவதாக அரசுக்குத் தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கொரோனா நோயாளிகளைப் பரிசோதனை செய்யும்போதும், சிகிச்சை அளிக்கும்போதும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது முறையாக நடத்தப்பட வேண்டும். குறிப்பாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி