ஆப்நகரம்

இனி இந்த திட்டம் இல்லை: சுகாதாரத் துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வாரம் தோறும் சனிக்கிழமை நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Apr 2022, 8:07 am
இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்தியதுதான்.
Samayam Tamil J Radhakrishnan


மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவைதவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணிகளும் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு குறைந்ததால், இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதேவேளையில், நாள்தோறும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு இந்த துறைதான்! ஸ்டாலின் கொடுக்கும் கிஃப்ட்: ஜூன் மாதம் சம்பவம்!

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவர் செல்வ விநாயகம், “தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள், இனி வரும் நாள்களில் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக நடத்தப்படும். எனவே, தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வாா்கள்.

தமிழிசை பதவிக்கு ஆபத்து: டெல்லி எடுக்கும் நடவடிக்கை!
இதைத் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடா்ந்து தடுப்பூசி வழங்கப்படும். போதிய அளவில் தடுப்பூசி இருப்பு தமிழகத்தில் உள்ளது. கொரோனா புதிய உருமாற்றத்தைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 1.37 கோடி பேர் இன்னும் இரண்டாம் தவணை செலுத்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி