ஆப்நகரம்

மனைவிக்கு கொரோனா: எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்!

எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 28 Jun 2022, 1:14 pm
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிகரிக்கும் கொரோனா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அலர்ட் செய்துள்ளார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி மனைவி
எடப்பாடி பழனிசாமி மனைவி


கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுதவிர, எடப்பாடி பழனிசாமி உதவியாளர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த ஆலோசனைகளை தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வருகிறார். மேலும், ஜூலை 11ஆம் தேதியன்று பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் உதவியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுக்குழு இடத்தை மாற்றும் எடப்பாடி: பின்னணி என்ன?
இதனால், பொதுக்குழு உள்ளிட்ட அதிமுகவில் நடக்கவிருக்கும் அடுத்தக்கட்ட நகர்வுகளில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அண்மையில் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி