ஆப்நகரம்

கொரோனா: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

தமிழ்நாட்டில் ஆறாம்கட்ட பொது முடக்கம், கொரோனா வைரஸ் பாதிப்பு, பரவல், பலி, தடுப்பு நடவடிக்கைகள், தளர்வுகள் குறித்த முக்கிய தகவல்களை லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்.

Samayam Tamil 2 Jul 2020, 10:55 am
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரே நாளில் சுமார் நான்காயிரம் வரை உயர்ந்து வருவதுடன் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட உள்ளது. பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவல் நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Samayam Tamil covid19 cases in madurai


தமிழ்நாட்டில் பொது முடக்கம் ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் என கொரோனா குறித்து தமிழ்நாட்டில் நிகழும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.

LIVE UPDATE

*செங்கல்பட்டில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீறியதாக இதுவரை 7.16 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16 கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

*சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60,533 பேரில் 36,826 பேர் நலமடைந்துள்ளனர்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு 500ஐ நெருங்குகிறது.

*ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

*ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆரணி நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. ஏற்கெனவே அங்கு வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

*தமிழகத்தில் நேற்று மட்டும் 3882 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 94,049 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 2182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 1264 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 2852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி