ஆப்நகரம்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Samayam Tamil 23 Sep 2020, 7:03 pm
கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும், அமைச்சர்கள், சட்டமன்றா உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
Samayam Tamil ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி


முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தனர்.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கதிர் ஆனந்தை மிரட்டிய உளவுத் துறையினர்?

இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி