ஆப்நகரம்

குருதாஸ் தாஸ்குப்தா மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல்

தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா என முத்தரசன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 31 Oct 2019, 4:16 pm
சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mutharasan


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த குருதாஸ் தாஸ்குப்தா, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்கோளாறு காரணமாக அவதிபட்டு வந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 83.

சிபிஐ மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமற்ற தலைவர் நம்மை விட்டு மறைந்தார் என்கிற செய்தியை நம் நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது.

இடைக்கால ஜாமின் மறுப்பு; ப.சிதம்பரத்தின் உடல் எடை இப்போ எவ்வளவு தெரியுமா?

ஏற்ற தாழ்வற்ற பொதுவுடமைச் சமுதாயம் காணத்துடித்த வங்கத்தின் சிங்கம் குருதாஸ் தாஸ் குப்தாவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது. மூன்று தினங்களுக்கு துக்கம் மேற்கொள்வதுடன் அவர் உயர்த்தி பிடித்த செங்கொடிகள் அரைக்கம்பத்தில் தாழப்பறக்க விடப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி