ஆப்நகரம்

தமிழக பந்த்: கம்யூ.,மூத்த தலைவர் மகேந்திரன் கைது

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் தஞ்சையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TOI Contributor 16 Sep 2016, 1:16 pm
சென்னை: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் தஞ்சையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil cpi leader c mahendran and hundreds of farmers arrested by the police in thanjavur
தமிழக பந்த்: கம்யூ.,மூத்த தலைவர் மகேந்திரன் கைது


காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், தஞ்சையில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் உள்ளிட்ட அக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி