ஆப்நகரம்

விஜய் வீட்டில் ஏன் ரெய்டு: முத்தரசன் சொன்ன காரணம்!

பாஜகவுக்கு சாதகமாக இல்லாதவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 7 Feb 2020, 3:55 pm
வெள்ளையனை எதிர்த்து அன்று மக்கள் ஒன்று திரண்டது போல் இன்று மோடி மற்றும் அமித்ஷா ஆட்சியை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு உள்ளனர் என முத்தரசன் ராமேஸ்வரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil விஜய் வீட்டில் ஏன் ரெய்டு    முத்தரசன் சொன்ன காரணம்


குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்களைப் பெறுவதற்கான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: அதிமுக நபர்களை காப்பாற்ற முயற்சி - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அத்துடன் திமுக கட்சி தொண்டர்களும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தர்மபுரி: பணிமனையில் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி!
இதனையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திபின் போது பேசிய முத்தரசன், "இந்திய வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆயிரம் பிரச்சினைகள் தலைக்கு மேல் உள்ள நிலையில் அதை எல்லாம் மூடி மறைக்கும் விதமாக பாஜக அரசு தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக குடியுரிமை சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அதனால் மதச்சார்பற்ற நாட்டின் மக்களை பிளவுபடுத்தும் விதமாக செயல்படுகிறது. இதனால் வெள்ளையனை எதிர்த்து அன்று மக்கள் ஒன்று திரண்டது போல் இன்று மோடி, அமித்ஷா ஆட்சியை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்" என தெரிவித்தார்.

“கவர்ச்சி விஜய் பயப்பட வேண்டாம், ரஜினி கதை என்ன”

மேலும், நடிகர் விஜய் வீட்டில் இரண்டு தினங்களாக நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை பற்றி கேட்ட நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த முத்தரசன், "கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக அரசுக்கு சாதகமாக இல்லாதவர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெறும். அதில் நடிகர் ரஜினி பணிந்து விட்டார் அதேபோல்தான் மற்றவர்களையும் பணியவைக்க விசாரணை நடைபெறுகிறது" என தெரிவித்தார்.

அடுத்த செய்தி