ஆப்நகரம்

Sitaram Yechury: தமிழத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க வியூகம்!!

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் சிபிஐ-எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அந்தக் கட்சியின் தமிழகத்திற்கான செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jan 2019, 12:31 pm
தமிழகத்திற்கு இன்று வருகை தரும் சிபிஐ-எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அந்தக் கட்சியின் தமிழகத்திற்கான செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Seetharam


திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் லெனின் சிலையை திறந்து வைக்க இன்று சிபிஐ-எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தமிழகம் வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கோவையில் அந்தக் கட்சியின் தமிழகத்தின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறுகையில், ''22ஆம் தேதி தமிழகம் வரும் சீதாராம் யெச்சூரி திருநெல்வேலியில் லெனின் சிலையை திறந்து வைக்கிறார். மறுநாள் 23ஆம் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்கிறார்.

லெனின் சிலை

மத்தியில் இருக்கும் ஆட்சியை நீக்கி மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்பதே எங்களது குறிக்கோள். பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்கத் தேவையான அனைத்து தந்திரங்களிலும் சிபிஐ-எம் ஈடுபட்டு வருகிறது'' என்றார்.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கைகோர்க்க தயாராக இருக்கும் சிபிஐ-எம் மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சியை எதிர்த்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜகவை எந்த அளவிற்கு எதிர்க்கிறோமோ அதே அளவிற்கு திரிணமூல் கட்சியையும் எதிர்க்கிறோம் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி