ஆப்நகரம்

7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை: என்ன சொல்கிறார் கே.பாலகிருஷ்ணன்?

7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கே.பாலகிருஷ்ணன் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Oct 2020, 9:41 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
Samayam Tamil k balakrishnan


ஆளுநர் வேண்டுமென்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுவதுடன், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருவதற்கிடையே, “மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும்” என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆளுநரிடம் இருந்து தற்போது வரை எந்த முடிவும் வராததால் Article 162ஐ பயன்படுத்தி நிர்வாக அதிகாரத்தின் படி கொள்கை முடிவெடுத்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி? அமைச்சர் அறிவிப்பு!

இது தொடர்பாக மார்க்ஸிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “மருத்துவ கல்வி இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

நீட் திணிப்பு, ஆளுநர் இழுத்தடிப்பு என பல முட்டுக்கட்டைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு தொடர் அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில், மாநில அரசின் சட்டத்தை ஆளுநர் இழுத்தடித்து வருவது, மாநில மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகும்

இப்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணை மூலமாவது, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி