ஆப்நகரம்

சசிகலா செய்த கெடுதல் என்ன? அவரை பொதுச் செயலாளராக ஏற்க மறுப்பது ஏன்? தடாலடி சி.ஆர்.சரஸ்வதி...!

சசிகலாவை ஒதுக்க காரணம் என்ன? என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் பதில் சொல்ல வேண்டும் என்று டிடிவி தரப்பு ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 21 Aug 2017, 2:25 pm
சென்னை: சசிகலாவை ஒதுக்க காரணம் என்ன? என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் பதில் சொல்ல வேண்டும் என்று டிடிவி தரப்பு ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil cr saraswathi condems eps team decision
சசிகலா செய்த கெடுதல் என்ன? அவரை பொதுச் செயலாளராக ஏற்க மறுப்பது ஏன்? தடாலடி சி.ஆர்.சரஸ்வதி...!


அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் டிடிவி தினகரனும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் டிடிவி ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு அப்படி என்ன கெடுதல் செய்து விட்டார்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஓபிஎஸ் தரப்பு விளக்கம் சொல்லட்டும் என்று குறிப்பிட்டார். தற்போதைய அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் வளர காரணமாக இருந்தவர் சசிகலா.

கட்சியையும், ஆட்சியையும் ஒருங்கிணைத்து ஈபிஎஸ் செயல்படுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டார். கருணாநிதிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரையே திமுக தூக்கி எறிந்தது.

ஆனால் அதிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு உழைத்து சாதித்து காட்டியவர் எம்.ஜி.ஆர். அதை யாரும் மறந்துவிட வேண்டும். அதே நிலைமை தான் இன்றும் நிலவுகிறது. இந்த கழகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தான் சசிகலாவும், டிடிவியும் விரும்புகிறார்கள்.

சசிகலா முதலமைச்சராக வரவேண்டும் என்று தற்போது எதிர்க்கும் அனைத்து அமைச்சர்களுமே கூறினர். ஆனால் தற்போது மாறியுள்ள நிலைமைக்கு காரணம் என்ன? இதனை நிச்சயம் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களும், தொண்டர்களும் எங்கள் தரப்பு நியாயத்திற்கு பதில் சொல்வார்கள்.

CR Saraswathi condems EPS team decision.

அடுத்த செய்தி