ஆப்நகரம்

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறப்பு!

கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பிதையத் தொடர்ந்து, காவிரியில் 90 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Jul 2018, 10:38 am
கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பிதையத் தொடர்ந்து, காவிரியில் 90 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
Samayam Tamil news-6-6
கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறப்பு!


கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி 50 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், காவிரியில் நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியைத் தாண்டியுள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி