ஆப்நகரம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு - புள்ளிவிவரங்கள் வெளியீடு!

பெண்களுக்கு எதிரான குற்ற ஆவணங்கள் வெளியிடப்படுள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 8:38 pm
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்ற ஆவணங்கள் வெளியிடப்படுள்ளது.
Samayam Tamil Crime


நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும், போதிய பலனளிக்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் குறித்து, புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கற்பழிப்பு 2015, 2016ஐ காட்டிலும் குறைந்துள்ளது.

எண்ணிக்கையில் 292 என இடம்பெற்றுள்ளது. அதேபோல் வரதட்சணை மரணங்கள் 48 எனவும், மானபங்கம் 744ஆகவும் இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை 9ஆகவும், கணவன் மற்றும் உறவினர்கள் கொடுமை 984 ஆகவும், பெண் கடத்தல் சம்பவங்கள் 806ஆகவும் நிகழ்ந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக கடந்த 2015, 2016 ஆண்டுகளைக் காட்டிலும், 2017ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Crimes against women in Tamilnadu year 2017 Data.

அடுத்த செய்தி