வர்தா புயல் அவசர உதவிக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதால், சென்னை மற்றம் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இந்த புயலால் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூரில் வர்தா புயல் மழையில் அவசர உதவிக்காக தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077, 04141 -220700, 04142-231666 ஆகிய எண்களை அவசர உதவிக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், மின்சாரத்துறை அவசர உதவிக்காக 94458 56039 என்ற எண்ணையும் கடலூர் மாவட்டம் அறிவித்திருக்கிறது.
வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதால், சென்னை மற்றம் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இந்த புயலால் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூரில் வர்தா புயல் மழையில் அவசர உதவிக்காக தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077, 04141 -220700, 04142-231666 ஆகிய எண்களை அவசர உதவிக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், மின்சாரத்துறை அவசர உதவிக்காக 94458 56039 என்ற எண்ணையும் கடலூர் மாவட்டம் அறிவித்திருக்கிறது.