ஆப்நகரம்

ரிப்போர்டரை சீண்டிப்பார்த்த சிவி சண்முகம்

நடத்தினார். கட்சி ஒற்றுமைக்காகவும், சின்னத்தை மீட்பதற்காகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

Samayam Tamil 18 Apr 2017, 5:17 am
தமிழக அமைச்சர்கள் பலர் மூத்த அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தினார். கட்சி ஒற்றுமைக்காகவும், சின்னத்தை மீட்பதற்காகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
Samayam Tamil cv shanmugam blast reporters while interview him
ரிப்போர்டரை சீண்டிப்பார்த்த சிவி சண்முகம்


ஆலோசனை கூட்டத்தின் போது டிடிவி தினகரன் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில், நீங்க என்ன சிபிஐயா? என்று அடிக்கடி கோபத்தோடு கேட்டார்.

அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் மிக முக்கியமான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், ஆலோசனைக் கூட்டம் பற்றி விளக்கினார்.

தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் கூறியதாக சண்முகம் தெரித்துள்ளார். அதனை வரவேற்று நாங்கள் ஆலோசனை நடத்தினோம். எங்கள் துணை பொது செயலாளர் பெங்களூரு சென்றுள்ளார் என்றார். அப்போது ஒரு ரிப்போர்டர் கூறுகையில், தினகரன் பெங்களுருவில் தான் இருக்கிறாரா என்று கேட்க, கோபத்தில் நீங்கள் தான் செய்தி போட்டீர்கள் என்று கூற, இப்படி போய்க்கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நீங்கள் என்ன சிபிஐ யா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றுவோம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி