ஆப்நகரம்

வங்கக் கடலில் புயல் சின்னம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி

இன்னும் 36 மணிநேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதியில் புயல் உருவாகும் நிலையில், தமிழக மாநிலம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Samayam Tamil 26 Apr 2019, 9:43 pm
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாறுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil வங்கக் கடலில் புயல் சின்னம் : தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை
வங்கக் கடலில் புயல் சின்னம் : தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை


இதையடுத்து இரு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அதன்படி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில் அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரியிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விடுப்பு எடுத்த அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்பும்படி முதல் மந்திரி நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. கிழக்கு இந்திய பெருங்கடல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.

மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறி வட தமிழகத்தில் 2 நாட்களில் நெருங்கும் என்ற் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி