ஆப்நகரம்

கஜா புயல்: முதல்வா் பாா்வையிட வராததால் பொதுமக்கள் ஆவேசம்

வருகின்ற 22ம் தேதி புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கையை பிரதமா் நரேந்திர மோடியிடம் வழங்கி முதல்வா் பழனிசாமி நிவாரண நிதி கோரவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 10:17 am
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் பழனிசாமி தற்போது வரை நேரில் சென்று பார்வையிடாத நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
Samayam Tamil CM Palaniswami in MGR Function


நாகை அருகே கஜா புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சா்கள் தலைமையில் மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும் புயலால் உயிாிழந்த 45 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று ஆடு, மாடுகளை இழந்தவா்களுக்கும், விவசாய பயிா்களை இழந்தவா்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடா்பான நிவாரணப் பணிகள் குறித்து முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளாா். இந்தகூட்டத்தில் மூத்த அமைச்சா்கள், பல்வேறு துறை அதிகாாிகள் கலந்துகொள்ள உள்ளனா்.

மேலும் வருகின்ற 22ம் தேதி புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கையை பிரதமா் நரேந்திர மோடியிடம் வழங்கி முதல்வா் பழனிசாமி நிவாரண நிதி கோரவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி