ஆப்நகரம்

Gaja Cyclone: கஜா தாக்குதலில் பல உயிர்களை காத்து 108 ஆம்புலன்ஸ் சேவை சாதனை!

புயல் பாதிப்பு பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவாக மீட்பு மற்றும் மருத்துவ உதவி செய்து அசத்தி வருகின்றது.

Samayam Tamil 16 Nov 2018, 3:52 pm
சென்னை : கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அளிப்பதில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 108


இன்று அதிகாலை கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கன மழை பெய்து வருகின்றது.

கஜா புயல் மழையிலிருந்து மக்கள் அவசர கால உதவியைப் பெற புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

800 அவசர அழைப்புகள்:
கஜா புயல் மீட்பு பணிக்காக 450 ஆம்புலன்ஸ் தயார்படுத்தப்பட்டதாகவும்,இந்த புயல் உதவி மையத்திற்கு 800 உதவிதேவை என்ற அழைப்புகள் வாந்ததாகவும், அவர்களின் 600 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவை வழங்கி மீட்டுள்ளதாக அவசர மீட்பு மைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சேவை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி