கஜா புயல் இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்காக இரண்டு கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர காலத்தில் உதவும் பொருட்களுடன் கடற்படையின் ரன்வீர், கன்ஜர் கப்பல்கள் உள்ளன. ரப்பர் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவக்குழு, மருத்துவ பொருட்கள், நிவாரண பொருட்கள் உள்ளிட்டவையும் மீட்புக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். மீட்புப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அவசர காலத்தில் உதவ தயாராக உள்ளது.
Cyclone Gaja: கஜா புயல் காரணமாக கடற்படை கப்பல்கள் தயார்!
சென்னை : கஜா புயல் காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்பு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil 15 Nov 2018, 9:05 am