ஆப்நகரம்

வங்கக் கடலில் 'கியான்ட்' புயல்: வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே சுமார் 850கி.மீ தொலைவில் மையம் கொண்டு உருவாகியுள்ள புயலுக்கு 'கியான்ட்' என பெயரிட்டுள்ளனர்.

TNN 25 Oct 2016, 3:04 pm
சென்னை: வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே சுமார் 850கி.மீ தொலைவில் மையம் கொண்டு உருவாகியுள்ள புயலுக்கு 'கியான்ட்' என பெயரிட்டுள்ளனர்.
Samayam Tamil cyclone kyant to bring heavy rain says meteorology
வங்கக் கடலில் 'கியான்ட்' புயல்: வானிலை மையம் தகவல்


வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகை பாம்பன் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கியான்ட் புயல் காரணமாக தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

அடுத்த செய்தி