ஆப்நகரம்

கண்களில் கறுப்புத்துணி கட்டி மீனவர்கள் போராட்டம்

ஒகி புயலின் போது காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

TNN 11 Dec 2017, 1:58 pm
ஒகி புயலின் போது காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
Samayam Tamil cyclone ockhi fishermen and thier relation protest in kanniyakumari iravinputhamthurai village
கண்களில் கறுப்புத்துணி கட்டி மீனவர்கள் போராட்டம்


ஒகி புயலின் போது கடலில் சிக்கி தவித்த மீனவர்களை மீட்க வலியுறுத்தி 10 நாட்களாக கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்ட மீனவர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மீனவ கிராமங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

குமரி மாவட்டத்தின் இரயுமந்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவிப்புத்தன்துறையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் கலந்து கொண்டுள்ள நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.





இதில் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி