ஆப்நகரம்

வர்தா புயல் உருவானது: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்ககடலில் வர்தா புயல் உருவானதால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

TNN 8 Dec 2016, 10:39 am
சென்னை: தென்கிழக்கு வங்ககடலில் வர்தா புயல் உருவானதால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil cyclone vardah forms southeast bay of bengal says imd
வர்தா புயல் உருவானது: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை. இதையடுத்து உருவான நாடா புயலும் போதுமான மழையின்றி பொய்த்து போனது. இதற்கிடையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் வர்தா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயல் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து 1060 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. வர்தா புயலால் ஆந்திராவில் 11ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அந்தமான் நிகோபார் தீவுகளை தாக்கி, பலத்த மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தும். இதனால் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 11ஆம் தேதி சென்னைக்கும், ஆந்திராவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 130கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Cyclone Vardah forms southeast bay of bengal says IMD. Soon heavy rain will come in andhaman nicobar islands.

அடுத்த செய்தி