ஆப்நகரம்

​ சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்றும் சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது

TNN 16 Aug 2017, 6:24 pm
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்றும் சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
Samayam Tamil cyclonic circulation may lead to more rain in chennai
​ சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை


சென்னையில், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, கோயம்பேடு, திநகர், நந்தனம், அடையாறு, ஆழ்வார்ப்பேட்டை, நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, திநகர், மந்தைவெளி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, சேப்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கோடம்பாக்கம், மேடவாக்கம், குரோம்பேட்டை மேலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.


மேலும் ஆழ்வார்ப்பேட்டை அருகேயுள்ள டிடிகே சாலையில் காற்று பலமாக வீசியதால் சாலையோரம் இருந்த மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேப் போன்று அண்ணா பல்கலையிலிருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் சாலையில் மரக்கிளைகள் விழுந்தது.

சாலையில் மரங்கள் விழுவதால் மின்விநியோகம் ஏதும் பாதிக்கப்படவில்லை என்றும், இருந்தபோதிலும் தொடர்ந்து மழைக்காலம் வருவதால் பாதுகாப்புடன் பயனம் மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம் திருக்கனம்மாள் சத்திரம், மதுவரவாயல், ஆதம்பாக்கம், மனப்பாக்கம், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, போரூர், ஆதம்பாக்கம்,மனம்பாக்கம், ஆவடி பகுதிகளில் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், புதுபாளையம், குள்ளம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மதுரையில், மேலூர், தும்பைப்பட்டி மற்றும் சில பகுதிகளில் மழை பெய்தது.

அடுத்த செய்தி