ஆப்நகரம்

சொத்துக்குவிப்பு வழக்கு: மறு சீராய்வு மனு மீது ஜூலை 3-ல் விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீதான விசாரணை வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

TNN 20 May 2017, 9:43 am
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு மீதான விசாரணை வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.
Samayam Tamil da case sasikala review petition in sc will be hearing on july 3
சொத்துக்குவிப்பு வழக்கு: மறு சீராய்வு மனு மீது ஜூலை 3-ல் விசாரணை


தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார். அதனையடுத்து சிறை சென்ற ஜெயலலிதா தரப்பில் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசரித்த தனி நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

அதன்படி, ஜெயலலிதா காலமானதால் அவரை தவிர்த்து மற்ற மூவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
DA case: Sasikala Review petition in SC will be hearing on July 3

அடுத்த செய்தி