ஆப்நகரம்

புதுக்கோட்டையில் இட்லி சாப்பிடும் போட்டி:பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி!

இட்லி சாப்பிடும் போட்டியின் போது கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2018, 4:13 pm
இட்லி சாப்பிடும் போட்டியின் போது கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil daily wages worker dead in idly eating competition in pudukkottai
புதுக்கோட்டையில் இட்லி சாப்பிடும் போட்டி:பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி!


படத்தைப் போன்று நிஜத்திலும், செய்ய வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். அப்படி விரும்புவது தவறில்லை. ஆனால், அதுவே விபரீதமாக மாறிவிடக்கூடாது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சூரி. ஏனென்றால், அப்படத்தில் சூரிக்கு பரோட்டா சாப்பிடும் போட்டி நடக்கும். இப்படத்தின் மூலம், சூரிக்கு வாழ்வு கிடைத்தது. ஆனால், நிழலைப் போன்று நிஜத்திலும் செய்ய முயன்ற ஒருவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இடலி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில், கூலித்தொழிலாளியான சின்னத்தம்பி என்பவரும் கலந்து கொண்டார். அப்போது, அவர் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, இட்லி தொண்டையில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த இந்தப் போட்டி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி