ஆப்நகரம்

கோவை மாநகரிலேயே இந்த நிலைமை: தலித் மக்களுக்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லை!

கோவை மாநகரில் அம்பேத்கர் நகர் பகுதி மக்களுக்கு மயானத்திற்கு செல்வதற்கான சாலை வசதி அமைத்துக்கொடுக்காததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

Samayam Tamil 31 Oct 2019, 3:15 pm
கிராமங்களில்தான் சாதி மோதல்களும், தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதும் நடைபெறுகிறது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவை மாநகராட்சியிலும் இந்தக் கொடுமைகள் அரங்கேறிவருகின்றன.
Samayam Tamil Untitled collage (10)


கோவை மாநகராட்சியில் 32ஆவது வார்டுக்கு உட்பட்ட லெனின் வீதி, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதியில் 15,000க்கும் அதிகமான தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் மயானத்துக்கு செல்வதற்கு சாலை வசதி செய்துதரப்படவில்லை. தனியார் நிலங்கள், முட்புதர்கள், ஓடை வழியாக உடலை எடுத்துச் சென்று வருகின்றனர்.

மதுரையில் தலித் மாணவரை பிளேடால் கீறிய ஜாதி வெறி!!

இதனால் விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் நான்கைந்து பேர் மட்டும் இறந்த உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு வருகின்றனர். மேலும் மயானத்தில் உடலை எரியூட்டும் இடத்தில் கூரை இல்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிங்காநல்லூர் அலுவலகத்துக்குச் சென்றால் காலப்பட்டி பகுதிக்குச் செல்லுமாறும், காலப்பட்டி அலுவலகத்துக்குச் சென்றால் சிங்காநல்லூர் செல்லக் கூறியும் அலைக்கழிப்பதாக கூறுகின்றனர். மேலும் பிற சாதிகளுக்கான மயானத்தில் சாலை வசதி, மேற்கூரை வசதி, மின்விளக்கு, தண்ணீர் குழாய் வசதி ஆகியவை செய்துகொடுப்பதாகவும் தங்கள் பகுதியில் மட்டும் எத்தனை முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மயானத்தின் பரப்பளவும் 1.97 ஏக்கர் அளவு இருந்ததாகவும் தற்போது கால் ஏக்கர் அளவுகூட இல்லையென்றும் கூறுகின்றனர்.

கால் மேல் கால் போட்டது குத்தமாய்யா... அதுக்கு அரிவாள் வெட்டா!!

கோவை நகர் ஸ்மார்ட்சிட்டியாக மாற்றப்படுவதற்கு பல கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் மயான வசதிகூட செய்துதரப்படாதது ஏமாற்றமளிப்பதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

அடுத்த செய்தி