ஆப்நகரம்

தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலையே: நீதிபதி அறிக்கை

தருமபுரி இளவரசன் மரணம் ஆணவக் கொலை என்று பல தரப்பினரும் கூறி வந்த நிலையில் தற்கொலை தான் என்று முன்னாள் நீதிபதி சிங்காரவேலா் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 9 Jun 2019, 12:19 pm
கலப்பு திருமணம் செய்து கொண்ட தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று முன்னாள் நீதிபதி சிங்காரவேலா் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil Elavarasan.


தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் இளவரசன். அதே பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகப் பெண்ணான திவ்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டாா். திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து அங்கு கலவரம் வெடித்தது. வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டன. இறுதியில் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறி திவ்யா பெற்றோா் வீட்டுக்கு சென்றாா்.

இதனைத் தொடா்ந்து கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளவரசன் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாதக சிலரும், இளவரசன் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிலரும் கருத்து தொிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ஓயவு பெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் சிங்காரவேலன் ஆணையம் முதல்வா் பழனிசாமியிடம் அறிக்கை அளித்ததாகவும், இந்த அறிக்கை இன்றும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சிபிசிஐடியின் விசாரணையின் தரவுகளை வைத்து, சிங்காரவேலன் ஆணையம் இந்த மரணம் தற்கொலைத் தான் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இளவரசனின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணையிலும் தற்கொலை செய்துகொண்டதாகவே முடிவு செய்யப்பட்டது என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டாா் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி