ஆப்நகரம்

22 ஆண்டுகளுக்கு பிறகு... கோவை கலவரத்தில் கொல்லப்பட்ட காவலர் மகளுக்கு அரசுப்பணி...

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜின் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பின் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2019, 3:36 pm
1997 ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் கோவை மாநகரத்த்தில் நடந்த கலவரம் ஒரு கருப்புப் பக்கம் என்றே சொல்ல வேண்டும். ஏறக்குறைய சுமார் 14 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட இந்த கலவரத்திற்கு முந்தைய நாள் செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது செல்வராஜின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kovi riot


1997 ஆம் நவம்பர் மாதம் கோவை உக்கடத்தில் இஸ்லாமியர்களுக்கும் அருந்ததிய இந்துக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டார் செல்வராஜ். இறக்கும்போது இவரது மகள் ஒரு 10 மாதக் குழந்தை.



தற்போது 22 வயதாகும் அவரது மகள் லாவண்யாவுக்கு அரசு வேலை வாங்கித்தர காவல்துறை பெரும் முயற்சி எடுத்து வந்தது. அதன் விளைவாகத் தற்போது கோவை வடக்கு மாவட்ட தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.



இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வழங்கினார். கடந்த திங்கள் கிழமையன்று பணியில் சேர்ந்து தன் அரசுப்பணியைத் தொடங்கிவிட்டார் லாவண்யா. இதனையடுத்து, தன் தயாருடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அடுத்த செய்தி