ஆப்நகரம்

பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேடு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்

பிஎஸ் என் எல் இணைப்பக முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று ஆஜராகிறார்.

TNN 3 Oct 2017, 10:50 am
பிஎஸ் என் எல் இணைப்பக முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று ஆஜராகிறார்.
Samayam Tamil dayanidhi maran come to cbi court for bsnl case
பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேடு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்


கடந்த 2004-2007ம் ஆண்டு காலகட்டத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது 300க்கும் அதிகமான பிஎஸ் என் எல் இணைப்புகளை தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார். இந்த பிஎஸ் என் எல் இணைப்புகள் அவரின் குடும்ப நிறுவனமான சன் டிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, பிஎஸ் என் எல் இணைப்பு முறைக்கேடு வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி மாறன் சகோதரர்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதன் பிறகு இந்த வழக்கு கடந்த செப்.8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, தயாநிதி மாறன், தொலைக்காட்சி ஊழியர்கள் ஆகியோர் ஆஜராகினர். ஆனால், இந்த வழக்கில் தொடர்புடைய கலாநிதி மாறன், பிஎஸ் என் எல் வேலுச்சாமி ஆகியோர் ஆஜராகவில்லை. இதில், தாங்கள் வெளியூரில் இருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும், ஆஜராவதிலிருந்து விளக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதில், மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த வழக்கு வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி