ஆப்நகரம்

மாந்தோப்பில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு: கொலையா ? தற்கொலையா? காவல்துறையினர் தீவிர விசாரணை!

திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 28 Mar 2019, 3:06 pm
திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil sa]apflnaslfna


வேலூர் மாவட்டம்,திருப்பத்தூர் அடுத்த பணியாண்ட பள்ளி ஊராட்சி வீரபள்ளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேட்டு இவருடைய மகன் முருகேசன் (33 வயது). இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.

இவர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள மரபட்டரையில் கூலி வேலை செய்து வருகின்றார். 23.03.019 அன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முருகேசன் இரவு ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனைத்தொடர்ந்து பல இடங்களில் தேடிப் பார்த்து அவரது மனைவி மறுநாள் காலை கந்திலி காவல் நிலையத்தில் கணவரை காணவில்லை என்று புகார் அளித்தார்.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். வீரப்பள்ளி அருகே பாரதி நகர் பகுதியில் காசி என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பு பகுதியில் முருகேசனுக்கு சொந்தமான இருசக்கர வாகனம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அடர்த்தியான மாந்தோப்பில் உள்ளே சென்று பார்த்த காவல்துறையினர் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு சடலம் இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அந்த சடலம் முருகேசன்தான் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் , அவர் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி