ஆப்நகரம்

டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் மூவர் பலி!

தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.

TNN 23 Sep 2017, 1:54 pm
சென்னை: தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil death count raises to 15 after 3 people died on friday due to dengue
டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் மூவர் பலி!


டெங்கு காய்ச்சலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. தினமும் டெங்கு காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ் (21) வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவரும், சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கவிதா என்பவரும் டெங்கு காய்ச்சலால் நேற்று உயிரிழந்தனர்.

இவர்களுடன் சேர்த்து டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர மற்ற காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது. தொடரும் இதுபோன்ற மரணங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், தமிழக அரசு விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Death count raises to 15 after 3 People died on Friday due to Dengue.

அடுத்த செய்தி