ஆப்நகரம்

சரக்கு பாட்டிலில் நத்தை! குடிமகன்கள் அதிர்ச்சி

அரியலூர் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டிலில் நத்தை இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 May 2018, 2:53 pm
அரியலூர் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டிலில் நத்தை இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tasmac snai


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்(40). கூலித்தொழில் செய்து வரும் இவர், நேற்று மதியம் கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது பாட்டிலைப் பார்த்த அவர், இறந்த நிலையில் நத்தை அதில் கிடந்தைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், பாட்டிலை திறக்காமலேயே டாஸ்மாக் ஊழியர்களிடம் சென்று காண்பித்து அய்யப்பன் முறையிட்டார். அதைப் பார்த்த ஊழியர்களை, மதுபானம் உற்பத்தி செய்யும் இடத்தில் நத்தை விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

அய்யப்பன் கடையில் ஏதோ வாக்குவாதம் செய்வதைக் கண்டு நெருங்கி வந்த மற்ற இந்திய குடிமகன்களும், மதுபாட்டிலில் நத்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, மதுபான பாட்டிலையும், அதற்கான ரசீதையும் பெற்றுக் கொண்டு அய்யப்பன் வீட்டுக்கு புறப்பட்டார்.

அடுத்த செய்தி