ஆப்நகரம்

கொரோனா: தமிழகத்தில் ஐந்தாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜ் நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 9:04 pm
தமிழகத்தில் இன்று மேலும் 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil corona cases in tn


சென்னையில் இன்று 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6037 பேர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ள நிலையில் குணமானோர்களின் மொத்த எண்ணிக்கை 2,44,675 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று மேலும் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5041 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய எண்ணிக்கையின் மூலமாக தமிழக கொரோனா உயிரிழப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனா போரில் பங்கேற்கக் கோவை சைன்ஸ் டீச்சர் மனு!

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 53,099 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி