ஆப்நகரம்

தமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் அடுத்தடுத்து உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Apr 2020, 11:46 am
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த 50 வயதான முதியவர் ஒருவர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil தமிழகத்தில் கொரோனா மரணம்


இவரது உடலை மருத்துவர்கள் அறிவுரைப்படி பேக் செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முகம் மட்டும் தெரியும் வகையில் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை யாரும் திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்; கொரோனா சிகிச்சையில் கைகோர்க்கும் நாகர்கோவில்!

ஏற்கனவே 75 வயதான முதியவர் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பியிருந்தார். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.

இவரது ரத்த பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை கிடைத்த நிலையில், அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோவிட்-19 வைரஸ் பாதிப்பிற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பலி மேலும் அதிகரிப்பு; முதியவரின் உயிரைப் பறித்த கொரோனா!

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ப்ளூ அறிகுறிகள் இருக்கும் அனைவரும் உடனே தனிமைப்படுத்தும் வார்டுகளுக்கு மாற்றப்படுவர் என்று தெரிவித்தார். பொதுமக்கள் நலன் கருதி ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகளை வீட்டிற்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும் வேலையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி