ஆப்நகரம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அக்டோபர் முதல் புதிய வசதி!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செலுத்தி மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

Samayam Tamil 11 Aug 2020, 7:37 pm
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு தனது டாஸ்மாக் நிறுவனம் மூலம் 2019-20ஆம் நிதியாண்டில் ரு.30,000 கோடி ஈட்டியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செலுத்தி மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது ஒரு சில கடைகளில் மட்டுமே கார்டு மூலம் மது வாங்கும் வசதி உள்ள நிலையில், அக்டோபர் மாத தொடக்கம் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேற எங்கேயும் இந்த கொடுமை இல்ல... இ-பாஸ் இம்சைக்காக குமுறும் பாஜக!!

முன்னதாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது. அனைத்து கடைகளையும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையும் தொழில்நுட்பம் மூலம் இணைப்பதற்கு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன், டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, சிசிடிவி கேமிராக்களையும் பொருத்த அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி