ஆப்நகரம்

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற சம்மதம் –தீபக்

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் சம்மதம் தெரிவித்துள்ளார்.

TNN 18 Aug 2017, 1:40 pm
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் சம்மதம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil deebak consent to make the veta home memorable
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற சம்மதம் –தீபக்


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் எனவும், அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா எதிர்ப்புத் தெரிவித்தார். வேதா இல்லம் தங்கள் பூர்வீக சொத்து என்றும் அதை நினைவில்லமாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் கூறிவந்த நிலையில், தீபாவின் சகோதரர் தீபக் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு ஆட்சேபணையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு, தீபக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், ஜெயலலிதா தாயார் சந்தியா உயில்படி வேதா நிலையம் எனக்கும் சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது என்றும், வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் சட்டப்படி எங்களது கருத்தை கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபக் எழுதியுள்ள கடிதத்தில் 9 ஆம் தேதி குறிப்பிட்டு பின் அடிக்கப்பட்டு 16 ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Deebak consent To make the Veta home memorable

அடுத்த செய்தி