ஆப்நகரம்

ஜெ., மரணத்தில் சந்தேகம் அதிகமானது: ஒருத்தர விடமாட்டேன்: கொதித்த தீபா!

ஜெயலலிதா மரணத்தில் இருந்த சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.

TNN 24 Sep 2017, 11:10 am
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் இருந்த சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil deepa angry about jayalalitha dead doubts
ஜெ., மரணத்தில் சந்தேகம் அதிகமானது: ஒருத்தர விடமாட்டேன்: கொதித்த தீபா!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓராண்டாகியுள்ளது.

ஆனால் இன்னும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தெளிவு கிடைக்கவில்லை.

இதற்கிடையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அமைச்சர்கள் உட்பட யாருமே அவரை பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா மரணம் குறித்த ஆழமான சந்தேகத்தை நிரூபணமாக்கியுள்ளனர் என்றார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் வழக்கு தொடர்வது உறுதி என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவோம் என கூறுபவர்கள் இத்தனை நாளாக என்ன செய்தனர்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Deepa angry about Jayalalitha dead doubts.

அடுத்த செய்தி