ஆப்நகரம்

முற்றியது வீட்டுச் சண்டை: மாதவனை துரத்தி அடித்த தீபா

தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை வீட்டிலிருந்து தீபா வெளியேற்றினார்.

TNN 15 Apr 2017, 9:01 am
சென்னை: தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை வீட்டிலிருந்து தீபா வெளியேற்றினார்.
Samayam Tamil deepa exits her husband madhavan from her home
முற்றியது வீட்டுச் சண்டை: மாதவனை துரத்தி அடித்த தீபா


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அவர் அரங்கேற்றினார். பேரவையின் செயலராக கார் ஓட்டுநர் ராஜாவையும், தலைவராக அவருடைய மனைவி சரண்யாவையும் நியமித்தார். அது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தீபாவை மாதவன் பிரிந்து சென்றார்.

மேலும் தனிக் கட்சி தொடங்கப்போவதாகவும், அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் மாதவன் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று தீபாவின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் மாதவன் சென்றுள்ளார். ஆனால் அவர் மாதவனை வெளியேற்றிவிட்டார். அப்போது இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டு, மோதல் வெடித்தது. அதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Deepa exits her husband Madhavan from her home.

அடுத்த செய்தி