ஆப்நகரம்

தீபக் சசிகலாவுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்றுவிட்டான்: ஜெ. தீபா பாய்ச்சல்

போயஸ் கார்டனில் நுழைய தடுக்கப்பட்டதாகக் கூறும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குண்டர்கள் தன்னை அடித்து வெளியே துரத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Times Now 11 Jun 2017, 12:23 pm
சென்னை: போயஸ் கார்டனில் நுழைய தடுக்கப்பட்டதாகக் கூறும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குண்டர்கள் தன்னை அடித்து வெளியே துரத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil deepa talks outside poyas garden
தீபக் சசிகலாவுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்றுவிட்டான்: ஜெ. தீபா பாய்ச்சல்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு இன்று காலை வந்திருக்கிறார். அவர் உள்ளே செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தன்னை போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். என் சகோதரர் தீபக் அழைத்ததால், ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கே வந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.



இதே போல செய்தியாளர்கள் நுழைவதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதற்காக செய்தியாளர்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது? யார் செய்தியாளர்களைத் தடுத்து நிறுத்து உத்தரவிட்டது? என்ற கேள்விகளுக்கு காவல்துறையினரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

பத்தரிகையாளர் ஒருவரின் கேமரா, மைக் ஆகியவை தாக்கி உடைக்கப்பட்டுள்ளன. சில பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
High drama outside Fmr TN CM's residence at Poes Garden #WATCH report pic.twitter.com/RZKlB8Sr1w — TIMES NOW (@TimesNow) June 11, 2017 இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தீபா, கூறியவற்றின் முக்கிய அம்சங்கள்:

1. போயஸ் கார்டன் நுழைந்ததும் அடித்து வெளியே தள்ளினார்கள்.

2. தீபக் (தீபாவின் அண்ணன்) என்னை திட்டமிட்டு போயஸ் கார்டனுக்கு அழைத்து அடித்து விரட்டிவிட்டான்.

3. போயஸ் கார்ட்ன் வேதா இல்லத்தில் ராஜம் அம்மாளும், இரண்டு குண்டர்களும் தவிர யாரும் இல்லை.

4. என்னை தாக்கத் தொடங்கியதும்தான் கணவர் மாதவனை வரச்சொல்லி அழைத்தேன்.

5. சசிகலாவுடன் இணைந்து பணத்துக்காக தீபக் அம்மாவைக் கொன்றுவிட்டான். அம்மா மாதிர இருந்த அத்தையை பணத்துக்காக கொன்றுவிட்டான்.

6. தீபக் என் கணவர் மாதவனை திட்டமிட்டுக் கொல்ல முயற்சிக்கிறான்.

7. இப்போது நடப்பதெல்லாம் ஒரு ஆட்சியா? பிரதமர் தலையிட்டு ஆட்சியைக் கலைக்க வேண்டும்.

8. திங்கட்கிழமை பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன்.

9. இனிமேல் போயஸ் கார்டன் பக்கமே வரமாட்டேன்.

10. இதுதொடர்பாக, நான் வழக்கு தொடர்ந்து தீபக்கை சட்டப்படிச் சந்திப்பேன்.

அடுத்த செய்தி