ஆப்நகரம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெ., அண்ணன் மகன் தீபக் ஆஜர்!

ஜெயலலிதா விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜரானார்.

Samayam Tamil 2 Jun 2018, 12:37 pm
சென்னை: ஜெயலலிதா விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜரானார்.
Samayam Tamil Deepak


முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இருப்பினும் அவரது மரணத்தில் இருந்த மர்மம் நீங்கவில்லை. பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதா மரணம் குறித்து, கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதா உறவினர்கள், மருத்துவர்கள், ஆளுங்கட்சி தரப்பினர், சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அவர்கள் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு தகவல்களை தெரிவித்தனர். அவர்களில் பலரை சசிகலா தரப்பினர் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரானார்.

குறுக்கு விசாரணைக்காக, ஜெயலலிதாவிடம் தனிச்செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் மற்றும் சசிகலா உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராகியுள்ளனர்.

இந்நிலையில் ஆஜரானவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் சென்றுள்ளனர்.

Deepak appears before Jayalalitha's Arumugasamy Inquiry Commission today.

அடுத்த செய்தி