ஆப்நகரம்

தீபக் ஜெயக்குமாரை யாரோ தூண்டிவிட்டுள்ளனர்: வைகை செல்வன்

''அதிமுக தலைமைக்கு எதிராக தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது. யாரோ அவரை தூண்டி விட்டுள்ளனர்'' என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

TOI Contributor 23 Feb 2017, 6:52 pm
''அதிமுக தலைமைக்கு எதிராக தீபக் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது. யாரோ அவரை தூண்டி விட்டுள்ளனர்'' என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
Samayam Tamil deepak interview is shocking one aiadmk spokes person vaigai selvan
தீபக் ஜெயக்குமாரை யாரோ தூண்டிவிட்டுள்ளனர்: வைகை செல்வன்


மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ''போயஸ் இல்லம் எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதிமுகவுக்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை தாங்க வேண்டும். டிடிவி தினகரன் தலைமை ஏற்பதை ஏற்க மாட்டேன். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பன்னீர் செல்வம் தலைமையை ஏற்றால், தினகரன் விட்டுக் கொடுப்பார்'' என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் அளித்த பதிலில், ''அதிமுக தலைமைக்கு எதிராக யாரோ தீபக்கை தூண்டி விட்டுள்ளனர். அவர் இவ்வாறு கருத்து தெரிவித்து இருப்பது வியப்பாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Deepak interview is Shocking one: AIADMK spokes person Vaigai Selvan

அடுத்த செய்தி