ஆப்நகரம்

போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தம்: அடித்துப் பேசிய தீபக்

போயஸ் கார்டன் வந்து சென்ற ஜெ. அண்ணன் மகன் தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு எனக்கும் தீபாவுக்கும் சொந்தம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

TNN 11 Jun 2017, 12:49 pm
சென்னை: போயஸ் கார்டன் வந்து சென்ற ஜெ. அண்ணன் மகன் தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு எனக்கும் தீபாவுக்கும் சொந்தம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
Samayam Tamil deepak speaks to media
போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தம்: அடித்துப் பேசிய தீபக்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு இன்று காலை வந்திருக்கிறார். அவர் உள்ளே செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தன்னை போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். என் சகோதரர் தீபக் அழைத்ததால், ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கே வந்திருக்கிறேன்” என்று கூறினார்.



இதனிடையே, ஊடகம் ஒன்றிற்கு தொலைப்பேசி மூலம் பேட்டியளித்த தீபாவின் அண்ணன் தீபக், “தீபா உள்ளே செல்வதற்கு யாரும் தடுக்கவில்லை. என்னையும் தீபாவையும் யாரும் தடுக்க முடியாது.” என்று கூறினார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர், “எனக்கும் தீபாவுக்கும் சொந்தம்” என் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்குப் பின், செய்தியாளர்களிடம் விரிவான பேட்டி அளித்த தீபா, தீபக் என்னை திட்டமிட்டு இங்கே வரவழைத்து, குண்டர்கள் மூலம் அடித்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டினார். தனது கணவரை கொல்ல தீபக் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி