ஆப்நகரம்

ஆ.கே.நகரில் நாளை முதல் தீபா பிரச்சாரம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தீபா நாளை முதல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக எம்.ஜூ.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

TNN 15 Mar 2017, 9:34 pm
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தீபா நாளை முதல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக எம்.ஜூ.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil deepas campaign start from tomorrow
ஆ.கே.நகரில் நாளை முதல் தீபா பிரச்சாரம்


முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தை அடுத்து அவர் எம்.எல்.ஏவாக போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடப்போவதாக அறிவித்தார். அவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி எம்.ஜூ.ஆர் அம்மா தீபா பேரவை ஒன்றை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜூ.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி சீனிவாசன் , " ஜெ.தீபா நாளை முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் " என்று தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சசி அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, திமுக ,தேமுதிக , தீபா உள்ளிட்ட பல கட்சி போட்டியிட இருப்பதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த இடைதேர்தல் தீபா முதல் ஆளாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த தேர்தலின் முடிவை பொறுத்தே தீபாவின் அரசியல் வாழ்க்கை தீர்மானிக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துகின்றனர்.


deepa's campaign start from tomorrow

அடுத்த செய்தி