ஆப்நகரம்

தீபாவளி: மதுரை வியாபாரிகளுக்கு டபுள் போனஸ்!

மதுரை வியாபாரிகள் அதிகாலை 2 மணி வரை தீபாவளி விற்பனைக்காக கடைகளை திறந்து வைத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 4:19 pm
மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், விருதுநகர் உள்பட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் துணிகள், இனிப்பு பலகாரங்களை பெற்று செல்ல மதுரைக்கு வந்து செல்வார்கள். தீபாவளி பண்டிகையின்போது மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய தினமும் வழக்கமாக இரவு முழுவதும் கடைகள் திறந்து வைக்கப்படும்.
Samayam Tamil 11MA-DEEPAVALI_CROWD


இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கடைகளை திறக்க ஜவுளி கடைக்காரர்கள் உள்பட வியாபாரிகள் தயாராக இருந்தனர். ஆனால், மதுரை மாநகர காவல்துறையினர், இந்த ஆண்டு சட்ட ஒழுங்குக் காரணமாக அனுமதி தர முடியாது என அறிவித்திருந்தது.

இதையடுத்து, வியாபாரி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் கடைகளை தீபாவளி பண்டிகைக்காக திறந்து வைக்க அனுமதிக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய தினம் வியாபாரிகள், அதிகாலை 2 மணி வரை திறந்து வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

அடுத்த செய்தி