நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக மத்திய மாநில அரசுகளை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போய் தற்போது கமலின் அரசியல் பிரவேசத்தை தமிழக மக்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளார்.
இது குறித்து செய்தியார்களுக்குப் பேட்டியளித்த நடிகர் கமல், நாங்கள் பேசியது என்னவாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடியும் என்றும், ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊழலையும், மதவாதத்தையும் எதிர்த்துப் போரிடுவதுதான் எங்களுடைய இலக்கு என்றும் அந்த கொள்கைக்காகப் போராடுபவன் என்ற பெயரும் ஒரளவுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஊழலும், மதவாத சக்திகளும் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் குறித்து இருவரும் விவாதித்தோம் என்றும் தெரிவத்தார். மேலும், நேர்மைக்குமு் தைரியத்துக்குமு் பெயர் பெற்ற கமல் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்றார்.
சமீப காலமாக மத்திய மாநில அரசுகளை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போய் தற்போது கமலின் அரசியல் பிரவேசத்தை தமிழக மக்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊழலையும், மதவாதத்தையும் எதிர்த்துப் போரிடுவதுதான் எங்களுடைய இலக்கு என்றும் அந்த கொள்கைக்காகப் போராடுபவன் என்ற பெயரும் ஒரளவுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஊழலும், மதவாத சக்திகளும் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் குறித்து இருவரும் விவாதித்தோம் என்றும் தெரிவத்தார். மேலும், நேர்மைக்குமு் தைரியத்துக்குமு் பெயர் பெற்ற கமல் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்றார்.