ஆப்நகரம்

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வருகை

இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக டிடிவி தினகரனிடம் இன்று இரவு முதல் டெல்லி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNN 19 Apr 2017, 6:05 pm
சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக டிடிவி தினகரனிடம் இன்று இரவு முதல் டெல்லி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil delhi crime branch police to investigate ttv dhinakaran on bribery charge from tonight
டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வருகை


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற போட்டி போட்டன. இதனிடையே, அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், இரட்டை இலை சின்னதை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் ரூ.1.30 கோடி லஞ்சம் வாங்கியதாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டெல்லியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) கைது செய்யப்பட்டார். அவரிடம் நேற்று முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு 8 மணி அளவில் சென்னை வரும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனிடம் லஞ்சப்புகார் குறித்து விசாரணையைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. தினகரன் லஞ்சம் கொடுத்தது உறுதியானாலோ முதல் தகவல் அறிக்கையில் தினகரன் பெயர் முதல் குற்றவாளியாக இடம்பெற்றாலோ அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி