ஆப்நகரம்

டெல்லி ஜெஎன்யு பல்கலை.யில் தமிழக மாணவா் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ரிஷி ஜோஷ்வா என்ற மாணவா் பல்கலைக்கழக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 17 May 2019, 8:47 pm
டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ரிஷி ஜோஷ்வா என்ற மாணவா் பல்கலைக்கழக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil suicide hang


வேலூரைச் சோ்ந்த ரிஷி ஜோஷ்வா என்ற மாணவா் டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்தாா். இந்நிலையில் அவா் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

இது தொடா்பாக டெல்லி காவல் துறையினா் கூறுகையில், இன்று பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் மாணவா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தொிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் வந்து பாா்த்தபோது, வளாகத்தினுள் உள்ள பொது அறை ஒன்றில் மாணவா் ஜோஷ்வா தூக்கில் தொங்கியவாரு இருந்தாா்.

அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவு உடைக்கப்பட்டு மாணவா் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தொிவித்தனா். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மாணவா் தனது ஆசிாியருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தொிகிறது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா். மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல் சவ்தா்ஜங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி