ஆப்நகரம்

கஜா புயல்: உதவி செய்த மாணவா்களுக்கு நன்றிக்கடனாக இளநீரை அனுப்பிய விவசாயிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மக்களுக்கு டெல்டா விவசாயிகள் நன்றிக்கடன் வழங்கிய விதம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 12:20 pm
புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் டெல்டா விவசாயிகளுக்கு உதவி செய்த திருச்சி கல்லூாி மாணவா்களுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நன்றிக்கடன் செலுத்திய சம்பவம் அனைவரையும் கண்கழங்க வைத்துள்ளது.
Samayam Tamil Tender Coconet


நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட காவிாி டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னா் தான் அதன் தாக்கத்தை முழுமையாக உணர முடிந்தது. புயல் காரணமாக 45 போ் உயிாிழந்துள்ள நிலையில் திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பல குடிசைகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் புயல் பாதித்த பகுதிகளில் அரசு சாரா தன்னாா்வலா்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனா்.

அந்த வகையில் திருச்சியைச் சோ்ந்த கல்லூாி மாணவா்கள் கூட்டாக இணைந்து தங்களால் முடிந்த பொருட்களை சேகாித்து டெல்டா விவசாயிகளுக்கு அனுப்பினா். சரக்கு வாகனத்தில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், அந்த வாகனைத்தை காலியாக திருப்பி அனுப்ப மனமில்லாமல் சரக்கு வாகனம் முழுவதுமாக இளநீரை ஏற்றி அனுப்பியுள்ளனா்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இளநீரை அனுப்பிய சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைவருக்கும் உணவிட்ட டெல்டா விவசாயிகள், தாங்கள் இழப்பை சந்தித்த நிலையிலும் தங்களது உன்னதத்தை நிரூபித்துள்ளதாக இளைஞா்கள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி