ஆப்நகரம்

ஈரோடு அருகே ரூ. 37 லட்சம், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

தமிழகத்தில் ரூ. 37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.

TOI Contributor 17 Dec 2016, 5:43 pm
தமிழகத்தில் ரூ. 37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.
Samayam Tamil demonetisation rs 37 lakh in new currency seized from car 5 arrested
ஈரோடு அருகே ரூ. 37 லட்சம், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்


ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம்-முடிச்சூர் ரோடு அருகே சென்று கொண்டடிருந்த ஒரு காரை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் காரில் ஒரு துணியால் கட்டி வைக்கப்பட்டு இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, காரில் இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சக்திவேல், சுரேஷ், மனோஜ், செந்தில்குமார் மற்று சபரி என்பது தெரிய வந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் செல்வாக்கு நிறைந்த ஒருவருக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி